தருமபுரி : அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்ட அதிமுக முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அவரது உறவினர்கள், மற்றும் அவருக்கு ஆதரவாளர்கள் என தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை மற்றும் தெழுங்கான உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையில் சோதனை செய்தனர். அப்போது தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து இன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு அதிமுக முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
அதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் புகழ் பெற்ற காசிக்கு அடுத்தபடியாக உள்ள காலபைரவருக்கு என தனி கோவில் அமைந்துள்ள அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் கோவிலில் அதிமுக முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் இன்று காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதியமான் கோட்டை பகுதிக்கு வந்து இருந்தார். காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் தன் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.