சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஏ.சி. பெட்டியில் தவறுதலாக ஏறிய பயணி ஒருவர் அதிலிருந்து இறங்கி பொது பெட்டியில் ஏறுவதற்காக அவசரமாக இறங்க முயன்றார்.
ரயில் கிளம்பிக்கொண்டிருக்கும்போது அவர் இறங்கியதால், எதிர்பாராதவிதமாக தவறி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் மாதுரி இதை பார்த்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று அந்த பயணியை தரதரவென இழுத்து வந்து காப்பாற்றினார்.
ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆண் பயணியை பெண் போலீஸ் மாதுரி தனி ஒருவராக தரதரவென இழுத்து உயிரை காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, துரிதமாக விரைந்த பயணியின் உயிரை காப்பாற்றிய காவலர் மாதுரிக்கு அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.