ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை கூண்டி அடைத்து வைத்து, பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கியாங்கி மாகாணம். அதில் உள்ள யாங்பியாங் நகரைச் சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை எனக் கூறி ஊர் முழுவதும் தேடியுள்ளார்.
அப்போது, தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த வீடு ஒன்றில் ஏராளமான நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், அந்த நாய்கள் கொடுமைப்படுத்தி வருவதைக் கண்டு வேதனை அடைந்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக விலங்குகள் உரிமை குழு ஆர்வலருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட வீட்டில் விலங்குகள் உரிமை குழு உறுப்பினர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதில், வீட்டின் பின்புறத்தில் கூண்டுகள், சாக்கு பைகள் மற்றும் ரப்பர் பெட்டிகளில் ஆயிரக்கணக்கில் அழுகிய நிலையிலான நாய்களின் உடல்கள் கிடந்து உள்ளன.
சில நாய்கள் உயிருடன் இருந்தாலும், நோய் வாய்ப்பட்டும், உடல் மெலிந்தும் காணப்பட்டன. நாள்பட்ட அந்த அழுகிய உடல்கள் சேர்ந்து ஒரு படிவம் போன்று தரையில் படர்ந்து இருந்து உள்ளது.
அந்த வீட்டில் இருந்த 60 வயது நபரை பிடித்து விசாரித்ததில், கைவிடப்பட்ட நாய்களை, சங்கிலி கொண்டு கட்டி போட்டு, பட்டினி போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக இதுபோன்று நாய்களை கொன்று குவித்து வருவதாகவும், வர்த்தக ரீதியிலான பராமரிப்புக்கான தொகையை கொடுத்து வந்த நிலையிலும், அதனை வாங்கி கொண்டு, நாய்களை அடைத்து, பட்டினி போட்டு கொலை செய்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.