கொரோனா வைரஸ் கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது அனைவருக்கும் தெரியும். அது ஆய்வகத்தில் தோன்றியதா இல்லை இயற்கையாக தோன்றியதா என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
இருப்பினும், இந்த கொரோனா வந்து 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதனால் உயிரிழப்புகள், நேரம் எனப் பலவற்றை நாம் இழந்துள்ளோம். கொரோனா பாதிப்பு அந்தளவுக்கு மோசமாக இருந்தது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னரே நிலைமை சற்றே மேம்பட்டது. கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னரே தீவிர பாதிப்பும் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்தது.
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இப்போது முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது கொரோனா வைரஸை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரசை சமீபத்தில் சர்வதேச அவசர நிலையில் இருந்து நீக்கினோம். அதற்காக கொரோனா பாதிப்பால் எந்தவொரு ஆபத்தும் இல்லை. இனி இது எந்தவொரு சுகாதார அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று இல்லை.
பாதிப்பு அதிகரித்து அடுத்த அலையை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் புதிய வேரியண்ட் உருவாக ஆபத்துகள் இருக்கவே செய்கிறது.
மேலும் கொடிய ஆற்றலுடன் மற்றொரு நோய்க் கிருமி உருவாகும் அச்சுறுத்தலும் இருக்கவே செய்கிறது. தொற்று நோய்கள் என்பது நாம் எதிர்கொள்ளும் ஒரே அச்சுறுத்தல்களில் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அனைத்து வகையான பிரச்சினைகளையும் சுகாதார அவசரநிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலான ஒரு சர்வதேச வழிமுறைகள்தான் நமக்கு இப்போது தேவை.
அடுத்த ஒரு பெருந்தொற்று வரும் போது உலக நாடுகள் இணைந்து கூட்டாக வைரஸ் பாதிப்பை எதிர்க்க வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்காக நாம் குறிப்பிட்ட இலக்குகளை 2030க்குள் அடைய வேண்டும்.
அப்போது தான் அடுத்த பெருந்தொற்றை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.