அமெரிக்காவில் ரூ.7.42 கோடி பங்களா கட்டி குடிபுகுந்த இந்திய வம்சாவளிக் குடும்பம் மர்மமான முறையில் மரணம்.. விசாரணையில் திடுக்!
அமெரிக்காவில் ரூ.7.42 கோடி பங்களா கட்டி குடிபுகுந்த இந்திய வம்சாவளிக் குடும்பம் மர்மமான முறையில் மரணம்.. விசாரணையில் திடுக்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான ஆனந்த் சுஜித் ஹென்றி, அவரது 40 வயது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 4 வயது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நாதன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த குடும்பத்தினர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கொலை மற்றும் தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணத்திற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.
கணவனும் மனைவியும் குளியலறையில் துப்பாக்கிச் குண்டு பட்டு உயிரிழந்ததாக San Mateo போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 9 மி.மீ துப்பாக்கி மற்றும் மெகசின் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் மற்றும் ஆலிஸ் இருவரும் ஐடி துறையில் பணியாற்றி கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தனர். 2020 ஆம் ஆண்டில் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.42 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வாங்கி நியூ ஜெர்சியிலிருந்து சான் மேடியோ கவுண்டிக்கு குடிபெயர்ந்தார்.
நீதிமன்ற பதிவுகளின்படி, ஆனந்த் 2016 டிசம்பரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் கணவனும் மனைவியும் மிகவும் நட்பாக இருந்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.