சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை 41 முறை ஸ்குருடிரைவரால் குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றிருந்தது. அப்போது, அங்கு ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அங்கு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த ஊழியர்கள் பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த கொலை தொடர்பாக துருக்கி போலீசார் விசாரணையைத் நடத்தி வந்தனர்.
இதனிடை ய, ரத்தக் கறையுடன் இருந்த டி-சர்ட்டை அணிந்தபடி ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். , விசாரணையில் அவர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். தனக்கு உளவியல் பிரச்சனைகள் இருப்பதால் மருந்துகள் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இந்தக் கொலை சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
This website uses cookies.