துருக்கியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களின் நிம்மதியை இழக்கச் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலையச் செய்தது. ரிக்டர் அளவு கோலில் 7.8 என்ற அளவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கி மட்டுமல்லாது சிரியாவிலும் பாதிப்பு ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இது வரை 46,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சுப்படுகிறது. இந்த துயர சம்பவம் துருக்கியின் வரலாறு காணாத பேரிடராக அந்த நாடு அறிவித்துள்ளது. அதேவேளையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று பரவும் சாத்தியங்களும் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று மாலை துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். அதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், துருக்கியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.