ஓடும் ரயில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 5 பயணிகள் உயிரிழந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவை நோக்கி ஜேச்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓடும் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதனால், உடனே ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இருப்பினும், 5 பயணிகள் இந்த தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தீவிபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி உள்பட முக்கிய எதிர்கட்சிகள் இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனவே, இந்த ரயில் தீவிபத்து எதிர்கட்சியினரின் சதிச்செயலாக இருக்குமோ..? என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.