காலியாக உள்ள இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி என தகவல் வெளியாகியுள்ளது.
தன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே தனக்கு எதிராக இருந்த காரணத்தால், தனது ஆதரவை பிரிட்டனில் இழந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவி மற்றும் தனது கட்சி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து அந்த பதவிகளுக்கு தற்போது காலி இடம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் போரிஸ் ஜான்சனை எதிர்த்து தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்-வும் உள்ளார்.
அதே போல, லிஸ் ட்ரஸ், பென் வாலஸ், ஜெர்மி ஹன்ட் எனும் முன்னாள் அமைச்சர்களும் இந்த இங்கிலாந்து பிரதமர் போட்டியில் இருப்பதால் போட்டி மிக மிக கடுமையாக இருக்கும் என்கிறது இங்கிலாந்து செய்தி வட்டாரம்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.. இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளரின நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை பிரிட்டன் பிரதமராக ரிஷி தேர்வானால் வரலாற்றில் முதன்முறையாக் பிரிட்டனை ஆளும் இந்திய வம்சாவளி என்ற பெருமையை அடைவார்.
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
This website uses cookies.