தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா.இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம்( மே 24) நிலச்சரிவு ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஐ.நா., அதிகாரி ஒருவர், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ தாண்டியதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும், தண்ணீர் வடிவதாலும் மீட்பு பணியில் ஈடுபடுவது பெரும் சவாலாக உள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவோர்கள், குச்சிகள், விவசாய உபகருணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: அரசு மாணவர்களுக்கு லேப்டாப் எங்கே? இந்த ஆண்டும் நொண்டிச்சாக்கு சொல்வீங்களா? திமுகவுக்கு இபிஎஸ் கேள்வி!
நிலச்சரிவு காரணமாக 1000த்திற்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது பெரிய சவாலாக உள்ளதாக ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார்.
இதனால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.