தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா.இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம்( மே 24) நிலச்சரிவு ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஐ.நா., அதிகாரி ஒருவர், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ தாண்டியதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும், தண்ணீர் வடிவதாலும் மீட்பு பணியில் ஈடுபடுவது பெரும் சவாலாக உள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவோர்கள், குச்சிகள், விவசாய உபகருணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: அரசு மாணவர்களுக்கு லேப்டாப் எங்கே? இந்த ஆண்டும் நொண்டிச்சாக்கு சொல்வீங்களா? திமுகவுக்கு இபிஎஸ் கேள்வி!
நிலச்சரிவு காரணமாக 1000த்திற்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது பெரிய சவாலாக உள்ளதாக ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார்.
இதனால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.