ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைனுக்கு விசிட்…போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்: குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார்..!!

கீவ்: பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டில் போர் பாதிப்புக்குப் பின் சுமார் ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டின் மக்கள்தொகையின் 30 சதவீதமாகும்.இதையடுத்து போர் பாதித்த மக்களை பார்வையிட உக்ரைன் நாட்டிற்கு வந்த ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகருக்கு சென்றார்.

அங்குள்ள பேக்கரிகளுக்கு எதிர்பாராத விதமாக சென்று அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். அங்குள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அங்கு மனநல மருத்துவர்கள் பணியில் உள்ளதாகவும், தினமும் ஒவ்வொரு மருத்துவரும் 15 பேரிடம் பேசி ஆலோசனை வழங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 முதல் 10 வயது குழந்தைகளே அங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.இது குறித்து ஏஞ்சலினா கூறியதாவது, அவர்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன்.

யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும் என்றார். மேலும், இந்த சந்திப்பின் போது ஒரு சிறுமி தனக்கு வந்த கனவை ஏஞ்சலினா ஜோலியிடம் கூறி பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இந்தியில் டப் செய்வாங்களா..ஆனால் இந்தி வேண்டாமா..பவன் கல்யாண் விளாசல்.!

பாலிவுட் பணத்தை மட்டுமே விரும்புகிறார்களா? தமிழக அரசியல்வாதிகள்,இந்தி மொழியை ஏற்க மறுக்கின்றனர்,ஆனால் பாலிவுட்டில் இருந்து வரும் பணத்தை மட்டும் விரும்புகிறார்கள்…

35 minutes ago

செல்போன் கடையில் பணம் கேட்டு திமுகவினர் மிரட்டல்.. அமைச்சர் பெயரை சொல்லி அடாவடி!

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் செயல்பட்டு செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் கடையில் திமுகவை சார்ந்த மூன்று…

46 minutes ago

வீட்டு வாசலில் காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை ; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வாசலில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகரின் ரோராவரில் உள்ள…

2 hours ago

அட்டையை பார்த்து அரசியல் செய்பவர் அண்ணாமலை… காங்., எம்பி தாக்கு!

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் அனைத்து…

3 hours ago

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

19 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

21 hours ago

This website uses cookies.