கீவ்: பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டில் போர் பாதிப்புக்குப் பின் சுமார் ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டின் மக்கள்தொகையின் 30 சதவீதமாகும்.இதையடுத்து போர் பாதித்த மக்களை பார்வையிட உக்ரைன் நாட்டிற்கு வந்த ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகருக்கு சென்றார்.
அங்குள்ள பேக்கரிகளுக்கு எதிர்பாராத விதமாக சென்று அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். அங்குள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அங்கு மனநல மருத்துவர்கள் பணியில் உள்ளதாகவும், தினமும் ஒவ்வொரு மருத்துவரும் 15 பேரிடம் பேசி ஆலோசனை வழங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 முதல் 10 வயது குழந்தைகளே அங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.இது குறித்து ஏஞ்சலினா கூறியதாவது, அவர்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன்.
யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும் என்றார். மேலும், இந்த சந்திப்பின் போது ஒரு சிறுமி தனக்கு வந்த கனவை ஏஞ்சலினா ஜோலியிடம் கூறி பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.