அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள லித்தோனியாவில் உள்ள கடையில் பகுதிநேர ஊழியராக பணியாற்றி வந்த இந்தியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் சைனி என்பவரை மர்ம நபர் ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்தார். சுமார் 50க்கும் மேற்பட்ட முறை சுத்தியால் தலையில் கொடூரமாக தாக்கி அவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக துரிமாக செயல்பட்ட போலீசார், ஜுலியன் ஃபால்க்னர் என்ற நபரை கைது செய்தனர். அவரது உடல் இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விவேக் சைனி அடித்து கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அமெரிக்காவில் பர்டூர் பல்கலை.,யில் படித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சாரியா பல்கலை., வளாகத்தில் கடந்த 28ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். மகனை காணவில்லை என்று அவரது தாயார் புகார் அளித்த நிலையில், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், இந்திய மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.