கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதியுடன் உல்லாசமாக இருந்த சிறை பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் கடந்த 2021ம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஜோர்டானுக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜோர்டான் மேலும் பல பெண்களை இதுபோல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோர்டானுடன் 32 வயது சிறை பெண் ஊழியர் ஒருவர் ரகசியமாக உல்லாசமாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காத நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் ஆதாரமாக சிக்கியுள்ளது.
இதனால், பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த பெண் ஊழியர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்த பெண் மீது லண்டன் போலீசார், தவறான நடத்தை போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.