கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதியுடன் உல்லாசமாக இருந்த சிறை பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் கடந்த 2021ம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஜோர்டானுக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜோர்டான் மேலும் பல பெண்களை இதுபோல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோர்டானுடன் 32 வயது சிறை பெண் ஊழியர் ஒருவர் ரகசியமாக உல்லாசமாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காத நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் ஆதாரமாக சிக்கியுள்ளது.
இதனால், பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த பெண் ஊழியர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்த பெண் மீது லண்டன் போலீசார், தவறான நடத்தை போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.