உலக முன்னணி தொழிலதிபராக வலம் வரும் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளமான ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். மேலும் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்குவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில் அதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த எலான் மஸ்க், தற்போது மீண்டும் ட்விட்டரை வாங்குவதில் மும்முரம் காட்டி வருதுகிறார்.
இந்த நிலையில் ட்விட்டரை வாங்குவதற்கு முன்னரே ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது ட்விட்டரில் இருந்து 75% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் சம்பள செலவை குறைத்து வருவாயை பெருக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும், ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களாகவே முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக்கொண்டு வரும் நிலையில் எலான் மஸ்க் திட்டத்தால் ட்விட்டர் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே முகநூலின் தாய் நிறுவனம் என கருதப்படும் மெட்டா நிறுவனம் தனது 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.