உலகம்

இந்துக் கோயில் மீது அதிபயங்கர தாக்குதல்.. மோடி தடாலடி பதில்!

கனடாவில் இந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கோழைத்தனமான முயற்சி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

டெல்லி: சமீப காலமாக, இந்தியா – கனடா நல்லுறவு இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இது ஆறிவரும் எனக் கருதிய நிலையில், தூதகர்கள் வெளியேற்றம், இந்துக் கோயில் மீது சேதம் என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி, இரண்டு நாடுகளும் தற்போது எதிரெதிர் திசையில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மீண்டும் இந்துக் கோயில் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சர்வதேச அளவில் அரசியல் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதன்படி, கனடாவின் டொராண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் என்ற பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலின் போது, கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு காரணமாக, கனடாவில் உள்ள தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகள் வந்ததற்கு கண்டனம் தெரிவித்து, இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “பிராம்ப்டனில் உள்ள இந்துக் கோயிலில் அரங்கேறிய வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனடா மக்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கடைபிடிக்க உரிமை உண்டு. மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “கனடாவில் இந்துக் கோயில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோல், நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: உள்துறை அமைச்சர் பதவியும் எனக்குத்தான்.. முதலமைச்சரை எச்சரிக்கும் துணை முதலமைச்சர்!

மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது குற்றம் சுமத்திய கனடா அரசு, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட 6 இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை இந்திய அரசு வெளியேற்றி உள்ளது. இவ்வாறு இந்தியா – கனடா உறவு தொடர்ந்து எதிரெதிராகவே அமைந்து வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

11 hours ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

11 hours ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

12 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

14 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

14 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

14 hours ago