சியோல்: வடகொரியா நாடு ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும், தங்கள் ஆயுத பலம் பற்றி உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும், இந்த ஏவுகணைகளை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி, 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதனை செய்தது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வகை ஏவுகணையானது ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு செல்லும் திறன் பெற்றது.
அமெரிக்காவையும் அடைந்து தாக்க கூடிய வல்லமை பெற்றது. இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளது. இதேபோன்று, 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில், ஒரு மணிநேரம் பறந்து சென்று பின்பு ஜப்பானிய கடல் பகுதிகளில் விழுந்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.
இதனை தென்கொரியாவின் பாதுகாப்பு படை பிரிவு இன்று காலை தெரிவித்து உள்ளது. வடகொரியாவின் ஹேம்ஹங் பகுதியில் வைத்து பரிசோதனை செய்யப்பட்ட இந்த இரு ஏவுகணைகளும் 110 கிலோ மீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவை சென்று தாக்கியுள்ளது.
அதிக அளவாக 25 கி.மீ. (15.5 மைல்கள்) உயரத்திற்கு பறந்து சென்றுள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. வடகொரியாவின் சமீபத்திய பரிசோதனையை தொடர்ந்து தென்கொரியாவின் பாதுகாப்பு, ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் இணைந்து கூட்டாக அவசரகால ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளன.
ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
This website uses cookies.