அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்சின்- மடிசான் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிலா குறித்து ஆய்வு செய்தனர். 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறையை அடிப்படையாக வைத்து நடந்த இந்த ஆய்வில்,பூமியின் துணைக்கோளான நிலா, பூமியை விட்டு மெதுவாக விலகிச் செல்வதாகவும், இதனால் அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் எனவும் விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலாவானது பூமியை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு 3.8 செ.மீ., தூரம் நிலா நகர்ந்து வருகிறது. இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இது இப்படியே நீடித்தால் அடுத்த 20 கோடி ஆண்டில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும்.140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை இதற்கு காரணமாக உள்ளது.
இதன் சக்திகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக நிலா விலகிச் செல்கிறது. நிலா மெதுவாக விலகி செல்வதால் பூமியின் சுழலும் திறன் குறையும்.எனவும்
விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
This website uses cookies.