இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு: வன்முறை பதற்றத்தை தணிக்க அரசு உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவதுடன், அந்த நாட்டு அரசியலையும் புரட்டிப்போட்டு உள்ளது.

பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அமைதியான போராட்டத்தில் கடந்த 9ம் தேதி வன்முறை வெடித்தது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதால் விரக்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், கொழும்புவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாய்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால், நாடு இதுவரை கண்டிராத வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டது.

இலங்கை முழுவதும் பரவிய இந்த வன்முறை சம்பவங்கள் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் உள்பட ராஜபக்சே ஆதரவாளர்கள் சுமார் 58 பேரின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதலும், தீ வைப்பும் அரங்கேறின. ராஜபக்சே ஆதரவாளர்கள், அரசு எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் எம்.பி. மற்றும் போலீசாரும் அடங்கியது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், கலவரக்காரர்களை கண்டதும் சுட முப்படையினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் குறையத்தொடங்கின.

இதற்கிடையில், இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு அளிக்கப்படும் என்றும் பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

8 minutes ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

33 minutes ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

35 minutes ago

டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…

2 hours ago

500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்

வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…

2 hours ago

ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…

2 hours ago

This website uses cookies.