உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ரஷ்யப் படைகள் கடந்த 10ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நகரங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இன்றும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலில் கர்ப்பிணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அந்தப் பெண்ணை உக்ரைன் ராணுவத்தினர் ஸ்டெரச்சரில் வைத்து கொண்டு சென்ற புகைப்படம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், இன்று உயிரிழந்து விட்டதாகவும், வயிற்றில் இருந்த குழந்தையும் பலியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் பகுதியில் மட்டும் ரஷ்ய படைகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 2க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.