இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலே விமானத்தில் இருந்து வெளியேறும் காட்சி வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி வருகின்றனர்.
கடந்த 9ஆம் தேதி மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இதையடுத்து அதிபர் மாளிகை சுற்றுலா தளம் போல பயன்படுத்திய மக்கள், பிரதமர் ரணில் பதவிவிலக கோரி அவர் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபசே தனது மனைவியுடன் நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ஊர்ஜிதமாக தெரிவிக்கின்றது. விமான நிலையத்தில் இருந்து மிகப் பாதுகாப்பான முறையில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்
மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை மாலத்தீவில் தலைநகரம் மாலே விமான நிலையத்திலிருந்து இருந்து வெளியேறும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.