இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கற்பிட்டி போலீஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப் பொருளை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்வதாக போலீஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை, கற்பிட்டி போலீஸாருக்கு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, ஆட்டோவை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அப்போது, இரண்டு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கற்பிட்டி துரையடி, மற்றும் மட்டக்குழி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரில் ஒருவர் பிரபல போதைப் பொருள் வியாபாரி எனவும், பல தடவைகள் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி போலீஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையது என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள், 18,000 ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள் மற்றும் கடத்திச் செல்ல முற்பட்ட ஆட்டோ ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி போலீசார் தெரிவித்தனர்.
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
This website uses cookies.