ஆப்கன் மீது ராக்கெட் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கடும் எச்சரிக்கை..!!

காபூல்: எல்லை பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 2 ஆயிரத்து 700 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்கின்றன. இருநாட்டு எல்லைப்பகுதியில் தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத அமைப்புகள் இருநாடுகள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்தவாறு தங்கள் நாட்டில் தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில், 6க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் ஆப்கானிஸ்தானின் குனர் மாகாணம் ஷெல்டன் மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தங்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

8 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

10 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

10 hours ago

This website uses cookies.