கீவ் : உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்கி குழியில் பதுங்கியிருந்த 23 வயது பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 3வது நாளாக ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனை 3 திசைகளிலும் சுற்றி வளைத்து தலைநகர் கீவ் நகரை குறி வைத்து தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக மக்கள் கீவ் நகரில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கீவ் மெட்ரோ சுரங்க பதுங்கு அறையில் தஞ்சமடைந்த 23 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
உடனடியாக பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்த காவல்துறையினர், தாய் – சேய்க்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
போர்க்களத்தின் நடுவே குழந்தை பிறந்த சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது. மேலும் இந்த குழந்தைதான் எங்களுக்கு சுதந்திரம் ஈட்டி தர உள்ளதாக கூறி அந்நாட்டினர் குழந்தையை சுதந்திரம் என அழைத்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.