ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 10க்கும் அதிகமான பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தது அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு, ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல் தான் வெளியிட்ட புத்தகத்தில் டிரம்புடனான உறவு குறித்து குறிப்பிட்டிருந்தார்.
2016ம் ஆண்டு வெளியான இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தாலும், இதன் தாக்கம் தேர்தலில் பயங்கரமாக எதிரொலித்தது. எனவே, ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியலுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து, பிரச்சனையை சரிகட்ட டிரம்ப் முயற்சித்துள்ளார். மேலும், இந்தத் தொகையை தனது தேர்தல் பிரச்சார செலவுகளில் கணக்கு காண்பித்துள்ளார்.
எனவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியது.
அதேவேளையில், டிரம்ப் சரண்டராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த டிரம்ப், சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.