அமெரிக்காவில் ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹீக் என்னும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குள் புகுந்த ஒரு நபர், கையில் இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இந்த தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது :- 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் பள்ளியில், 18 வயதுடைய இளைஞர் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 14 மாணவர்கள், 1 ஆசிரியர்,மேலும் இருவர் என 18 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர், என்றார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் சென்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெக்சாஸ் மாகாண கவர்னருடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.