அமெரிக்காவில் ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹீக் என்னும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குள் புகுந்த ஒரு நபர், கையில் இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இந்த தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது :- 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் பள்ளியில், 18 வயதுடைய இளைஞர் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 14 மாணவர்கள், 1 ஆசிரியர்,மேலும் இருவர் என 18 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர், என்றார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் சென்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெக்சாஸ் மாகாண கவர்னருடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
This website uses cookies.