இலங்கை தலைநகர் கொழும்பில் வீதியை மறித்து நடுவீதியில் டயர் எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆளும் ராஜபக்சே அரசு பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஒரு கட்டத்தில் இலங்கை முழுவதும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. இதையடுத்து மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர், எம்பி வீடு என அனைத்து இடங்களில் மக்கள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
சவாலுக்கு மத்தியில் பதவியேற்றுள்ளேன், நிச்சயம் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பு – புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மக்கள் கூறுகையில், எமக்கு ரணிலும் வேண்டாம்,u சஜித்தும் வேண்டாம், கோட்டாகமவிற்கு செல்லவுள்ளோம். மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கிறார்கள்.
25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.